
25 இலட்சம் ரூபா இலஞ்சம் பெறுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் நாரஹேன்பிட்டிய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கொஹுவல பிரதேசத்தில் இவர் கைது செய்யப்ட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வைத்தியர் ஒருவரினால் இழைக்கப்பட்ட தவறிற்கு வழக்கு தொடராமல் இருக்க 25 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய பொலிஸ் உயரதிகாரி, குறித்த இலஞ்சப் பணத்தை பெற்றுக் கொள்ளும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.