
இந்திய எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கையின் தென்பகுதி மீனவர்கள் 6பேரை ரோந்து சென்ற இந்திய கடற்படையினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 6பேரையும் காரைக்கால் மார்க் துறைமுகத்துக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலையே அவர்கள் வந்து சேர்வார்கள் என்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய மற்றும் இலங்கை மீனவர்களும் அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இரு பகுதிகளிலும் கைது செய்யும் சம்பவங்கள் ஆரம்பித்துள்ளன.
அத்துடன் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இலங்கை வரும் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோர் மீனவர் பிரச்சினைக்கு ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.